by Staff Writer 23-04-2018 | 9:15 PM
COLOMBO (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணக்க அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டுசெல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்க அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துவருகின்றனர்.
https://www.facebook.com/265986223570334/videos/949923748509908/