புத்தளத்தில் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

புத்தளத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

by Staff Writer 22-04-2018 | 6:14 PM
COLOMBO (News 1st) புத்தளம் மதுரங்குளி முக்குத் தொடுவாய் பகுதியில் 7 வயது சிறுவன் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனது நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நேற்று மாலை குறித்த சிறுவன் கீழே வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். சுயநினைவற்ற நிலையில் சிறுவன் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதன்போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து சடலம் புத்தளம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் இன்று மாலை பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். முக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த 7 வயதான சசிது ஆலோக என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.youtube.com/watch?v=Rb_JfDAjxPo