மீனவர்கள் அவதானத்துடன் செயற்படவும்

கடல் சீற்றம் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

by Staff Writer 22-04-2018 | 3:00 PM
COLOMBO (News 1st) புத்தளம் - கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=sacBdZqapdY