இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

பேருவளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

by Bella Dalima 21-04-2018 | 7:51 PM
Colombo (News 1st) பேருவளை கலங்கரை விளக்கத்தை பார்வையிடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொழும்பு - 12 ஐச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரும் அவரின் 24 வயதான சகோதரியும், சிலருடன் பேருவளை கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட இன்று காலை சென்றுள்ளனர். கற்பாறையொன்றின் மீது இவர்கள் அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில் கடல் அலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். படகொன்றின் மூலம் அவர்களைக் காப்பாற்றி பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.