8 மாத குழந்தை வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை

இந்தியாவில் 8 மாத குழந்தை வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை

by Bella Dalima 21-04-2018 | 4:05 PM
இந்தியாவில் 8 மாத குழந்தையொன்று வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வீதியோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த பலூன் வியாபாரியின் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. CCTV காணொளிகளை அடிப்படையாக வைத்து 21 வயதான இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையை தோளில் சுமந்து சென்ற காட்சி CCTV-இல் பதிவாகியுள்ளது. குழந்தையின் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.