by Bella Dalima 20-04-2018 | 4:00 PM
Colombo (News 1st)
பயணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கர வண்டிகளில் மீட்டர் மானிகளைப் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பில், கட்டண விபரங்களை காட்சிப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.
கட்டண விபரங்களைக் காட்சிப்படுத்தாத முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.