சம்பந்தன் வடக்கு மக்களின் பிரச்சினையை பேசுவதில்லை

எதிர்க்கட்சித் தலைவர் வட பகுதி மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதில்லை: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 20-04-2018 | 10:33 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு, கிழக்கை பிரிப்பது பற்றி பேசுகிறாரே தவிர, வட பகுதி மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஸ தலதா மாளிகைக்கு சென்று இன்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். காணொளியில் காண்க...