நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலை வரை யாத்திரையொன்று முன்னெடுப்பு
by Bella Dalima 19-04-2018 | 6:19 PM
Colombo (News 1st)
நாட்டின் நலன் கருதி நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலை வரையான யாத்திரையொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் அமைதி, நல்லிணக்கம் ஏற்பட்டு, இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி, ஒற்றுமை நிலைக்க இறையருள் வேண்டி புனித திருத்தல தரிசன யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். நல்லூரில் ஆரம்பமான இந்த யாத்திரை சிவனொளிபாதமலை வரையில் பயணிக்கவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று காலை நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமானது.
இலங்கை முதலுதவி சங்கம், இந்து சமய தொண்டர் சபை, யாழ். சின்மயா மிஷன் ஆகியன இணைந்து இந்த யாத்திரையை ஏற்பாடு செய்துள்ளன.