அமோனிய தாங்கிக்குள் வீழ்ந்து ஐவர் உயிரிழப்பு

ஹொரணையில் இறப்பர் தொழிற்சாலையிலுள்ள அமோனியா களஞ்சிய தாங்கிக்குள் வீழ்ந்து ஐவர் உயிரிழப்பு

by Staff Writer 19-04-2018 | 2:22 PM
COLOMBO (News 1st) ஹொரணை பெல்லபிட்டிய பகுதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தத்தில், அங்கு பணிபுரிந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கியில் வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயன்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.