வௌ்ளவத்தையில் பஸ்ஸின் சில்லில் சிக்கி இளைஞர் பலி

வௌ்ளவத்தையில் பஸ்ஸின் சில்லில் சிக்கி இளைஞர் பலி

by Staff Writer 19-04-2018 | 10:49 AM
COLOMBO (News 1st) கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பஸ் சில்லில் சிக்குண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பஸ் ஒன்றின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கில் பஸ்ஸில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் பஸ்ஸின் பின்பக்க சில்லுக்குள் அகப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.