காணாமற்போனவர் காட்டிலிருந்து சடலமாக மீட்பு

மன்னாரில் காணாமற்போனவர் காட்டிலிருந்து சடலமாக மீட்பு

by Bella Dalima 19-04-2018 | 10:10 PM
Colombo (News 1st)  மன்னார் - ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் காணாமற்போன 72 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக சடலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்