by Bella Dalima 19-04-2018 | 8:28 PM
Colombo (News 1st)
புத்தளம் - மன்னார் பிரதான வீதியில் பழைய எழுவான்குளம் பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பழைய எழுவான்குளம் பகுதியில் சுமார் 4 அடி உயரத்திற்கு வௌ்ளநீர் நிரம்பியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பழைய எழுவான்குளம் பகுதி நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.