நாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் அதிகரிப்பு

நாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் அதிகரிப்பு

by Bella Dalima 18-04-2018 | 5:51 PM
Colombo (News 1st)  கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தில் நாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் 0.5 வீதமாக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உலோகப்பொருட்கள், மரம் மற்றும் தோல் பொருட்களின் உற்பத்தி அதிகரித்தமையே இதற்கான காரணம் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் உலோகத் தயாரிப்புகள் 30.2 வீதமாகவும், மரத்தாலான பொருட்கள் 20.5 வீதமாகவும் தோல் பொருட்களின் தயாரிப்பு 16.2 வீதமாகவும் அதிகரித்துள்ளது.