தனியார் வங்கியொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை

சீதுவையில் தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை

by Staff Writer 18-04-2018 | 11:52 AM
COLOMBO (News 1st) சீதுவை நகரில் தனியார் வங்கியொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 9 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட பணத்தொகை இதுவரை மதிப்பிடப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

ஏனைய செய்திகள்