உலகின் மிகப்பெரிய விமானம் மத்தளையில் தரையிறக்கம்

உலகின் மிகப்பெரிய விமானம் மத்தளையில் தரையிறக்கம்

by Staff Writer 18-04-2018 | 1:46 PM
COLOMBO (News 1st) உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான ''Antanov An-225 Mriya'' எனப்படும் விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து குறித்த விமானம் வருகை தந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். எரிபொருள் நிரப்புவதற்காக இந்த விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.55 க்கு தரையிறக்கப்பட்ட குறித்த விமான, கராச்சி நோக்கி நாளை காலை இங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. பொதிகள் சேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் 24 பணியாளர்களும் வந்தடைந்ததாக எமது செய்தியாளர் கூறினார் https://www.youtube.com/watch?v=sZ8EZGCUfUY