தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க இந்தியா உதவவேண்டும்

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தல்

by Bella Dalima 18-04-2018 | 8:37 PM
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பாளையங்கோட்டையில் ஊடகவியலாளர்களை நேற்று (17) சந்தித்தபோதே முதலமைச்சர் இந்தக் கருத்தினை வெளியிட்டதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து இந்திய அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கோரியுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு அதிக நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.