அமெரிக்காவின் GSP வரிச்சலுகை மீண்டும் அமுலுக்கு

அமெரிக்காவினால் வழங்கப்படும் GSP வரிச்சலுகை மீண்டும் அமுலுக்கு

by Staff Writer 18-04-2018 | 1:11 PM
COLOMBO (News 1st) இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் அமுலுக்கு வரவுள்ளது. ஜீ.எஸ்.பி வரிச்சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கைச்சாத்திட்டார். இதற்கிணங்க இந்த வரிச்சலுகை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை. இதன் விளைவாக ஜீ.எஸ்.பி வரிச்சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டுன் காலாவதியாகியது. இதனைத்தொடர்ந்து ஜீ.எஸ்.பி வரிச்சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு 2018 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டன. எவ்வாறாயினும் மீண்டும் அந்த வரிச் சலுகையை வழங்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=VObsglc-Kko