மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை

by Staff Writer 17-04-2018 | 10:56 AM
COLOMBO (News 1st) முறையற்ற நிதி பயன்பாடு தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிணை நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாமையினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க காலத்தில் சதொச நிறுவனத்தின் பணத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, 39 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து அதனை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நேற்று (16) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பின்னர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபர் வௌிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் உத்தரவிடப்பட்டதுடன் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு.....