உத்திரபிரதேசத்தில் 7வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மீண்டும் ஒரு கொடூரம்: உத்திர பிரதேசத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

by Bella Dalima 17-04-2018 | 3:40 PM
காஷ்மீரில் 8 வயதி சிறுமி ஆசிஃபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் மாறுவதற்குள் உத்திர பிரதேசத்தில் நேற்று (16) 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தின் ஈட்டா நகரின் புறநகரான மண்டி சமிதிக்கு நேற்று ஒரு திருமணத்திற்காக 7 வயது சிறுமி அவரின் பெற்றோருடன் சென்றுள்ளார். நள்ளிரவு1.30 மணி அளவில் திருமணத்திற்காக பந்தல் அமைக்கும் பணியில் இருந்த ஒருவர் வெளியில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கயிற்றால் கழுத்தை இறுக்கி சிறுமியைக் கொலை செய்து, அருகே இருக்கும் கட்டிடத்தில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சிறுமியைக் காணவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அந்த கட்டிடத்தில் சிறுமி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அந்தச் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஈட்டா, ஃபருக்காபாத் சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் பொலிஸார் சென்று அவர்களிடம் சமாதானம் செய்து, ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்துள்ளனர். பொலிஸார் சிறுமியின் பெற்றோரிடம் முறைப்பாடொன்றைப் பெற்றுக்கொண்டு, சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியைக் கொலை செய்த சந்தேகத்தில் பந்தல் அமைக்கும் ஊழியர் சோனு ஜாதவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன.