வணிக மாநாட்டில் ஜனாதிபதி நாளை உரை

பொதுநலவாய நாடுகளின் வணிக மாநாட்டில் ஜனாதிபதி நாளை உரை

by Bella Dalima 17-04-2018 | 9:47 PM
Colombo (News 1st)  பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டினையொட்டி இடம்பெறும் வணிக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (18) பிரதான உரையாற்றவுள்ளார். நிலையான அபிவிருத்திக்கான இலக்கினை அடைவது தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் அதேவேளை இளைஞர், மகளிர் மற்றும் வர்த்தக மாநாடுகள் இடம்பெறவுள்ளன. இந்த விஜயத்தின் போது அரச தலைவர்கள் பலரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். பொதுநலவாய விளையாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதன் பின்னர் பிரித்தானிய மகா ராணியின் 92 ஆவது பிறந்த தின நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.