ஜனாதிபதி லண்டன் வாழ் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார்

ஜனாதிபதி லண்டன் வாழ் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார்

by Staff Writer 17-04-2018 | 6:44 AM
COLOMBO (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று லண்டன் வாழ் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி லண்டன் சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது ஜனாதிபதி நேற்று முன்தினம் லண்டனுக்கு பயணமாகியிருந்தார். லண்டனில் இடம்பெற்ற புதுவருட சுப நேரங்களுள் ஒன்றான தலைக்கு எண்ணெய் தோய்க்கும் நிகழ்விலும் நேற்று ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார் இதேவேளை மாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாட்டு அரச தலைவர்களையும் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது சந்திக்க எதிர்பார்த்துள்ளமை சிறப்பம்சமாகும். https://www.youtube.com/watch?v=u4nyhCPt2lU