சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8.9 சதவீதத்தால் அதிகரிப்பு

by Bella Dalima 17-04-2018 | 4:43 PM
Colombo (News 1st)  2018 ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2017 டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. அத்துடன், கடந்த ஜனவரி மாதம் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 2 ,38 ,924 பேர் வருகை தந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.