முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

by Staff Writer 16-04-2018 | 3:02 PM
COLOMBO (News 1st) முறையற்ற நிதி பயன்பாடு தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செ்யயப்பபட்ட முன்னாள் அமைச்சர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். கடந்த அரசாங்க காலத்தில் சதோச நிறுவனத்தின் பணத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, 39 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து அதனை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.