by Staff Writer 16-04-2018 | 3:43 PM
COLOMBO (News 1st) சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணிகளின் நலன் கருதி விசேட பஸ் சேவைகள் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தள்ளது.
போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 76 மில்லியன் ரூபாவென சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.