சிட்னியில் காட்டுத்தீ

காட்டுத்தீயினால் சிட்னியில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை

by Staff Writer 16-04-2018 | 4:40 PM
COLOMBO (News 1st) அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பரவிவரும் காட்டுத்தீயினால் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தொடர்ந்தும் பரவி வரும் தீயினால், அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து பொதுமக்களை வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 500 இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சேவையில் ஈபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயினை கட்டுப்படுத்தி, நிவாரணங்களை வழங்குமாறு அந்நாட்டு பிரதமர் மெல்கம் ட்டர்ன்புல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.