by Staff Writer 16-04-2018 | 4:01 PM
COLOMBO (News 1st) பண்டாரவளை எல்ல பகுதியில் காரொன்று விபத்திற்குள்ளானதில் 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கும்பல்வெல்ல - வெல்லவாய வீதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்,வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் 3 வயது குழந்தையும், குழந்தையின் தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழந்தையின் தாய், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=Kmw85zBbyGY