by Staff Writer 16-04-2018 | 4:32 PM
COLOMBO (News 1st) அமெரிக்காவின் தெற்கு பகுதி மற்றும் கனடாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக அப்பகுதிக்கான விமான சேவைகள் பாதிக்கபப்பட்டுள்ளன.
அதிக பனி மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை குறித்த பகுதியில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கனடாவின் டொரன்டோ பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதோடு 200 இற்கும் அதிகமான சாலையோர விபத்துக்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கான 750 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.