வாகரையில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

மட்டக்களப்பு வாகரையில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 15-04-2018 | 1:28 PM

COLOMBO ( News 1st )  - மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவுக்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர் 30 வயதான ஒருவரே மண்வெட்டில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் தலைமறைவாகியுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.