பஸ், ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை

பஸ், ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

by Bella Dalima 14-04-2018 | 6:04 PM
Colombo (News 1st)  இலங்கை போக்குவரத்து சபை - தனியார் பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அட்டைகளைப் பயணிகள் கொள்வனவு செய்வதன் மூலம், பஸ் அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயணக்கட்டணம் இந்த அட்டையில் இருந்து குறைத்துக்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. போக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் Lanka Pay நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த அட்டையை தயாரித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இலத்திரனியல் அட்டை நடைமுறையினால் பயணிகள் மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.