Colombo (News 1st)
மத்திய மாகாண ஆளுநராக நேற்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று மீண்டும் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து, மத்திய மாகாண ஆளுநராக பி.பீ. திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பி.பீ. திசாநாயக்க நேற்று ஊவா மாகாண ஆளுநராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வெற்றிடம் நிலவும் ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு, ஒருவர் நியமிக்கப்படும் வரை, பி.பீ. திசாநாயக்க ஊவா மாகாண ஆளுநராக பதவியில் நீடிப்பார் என ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.