கித்சிறி ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு

ஐ.தே.க நகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு

by Bella Dalima 13-04-2018 | 8:40 PM
Colombo (News 1st)  MTV / MBC ஊடக வலையமைப்பின் தலைமையகத்திற்கு முன்பாக அமைதியின்மையைத் தோற்றுவித்தமை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்பு இடம்பெற்று சில நிமிடங்களில் கொழும்பு பிரேப்ரூக் பிளேஸிலுள்ள MTV / MBC ஊடக வலையமைப்பின் தலைமையகத்திற்கு வருகை தந்த சிலர் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரதான நபரான ஐக்கிய தேசியக் கட்சியின் நகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இன்று முற்பகல் 11 மணி முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.