இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

எதிர்வரும் 8 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

by Bella Dalima 13-04-2018 | 3:31 PM
Colombo (News 1st)  எதிர்வரும் 8 மணித்தியாலங்களுக்கு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாவட்டங்களில் வசிப்போர் இடி, மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்