வறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு

வறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு

by Staff Writer 12-04-2018 | 7:40 AM
வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கான மாதாந்த வறட்சி நிவாரண கூப்பன் அட்டைகளை விநியோகிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இம் மாதம் இறுதி வரை வறட்சி நிவாரண கூப்பன் அட்டைகளை வழங்கவுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.