கிணற்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் மீட்பு

by Bella Dalima 12-04-2018 | 3:28 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் வீட்டுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குளிக்கச்சென்ற சிறுவன் நேற்று (11) மாலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து கிணற்றிலிருந்து இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்