ஏழு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்திற்கு மாற்றம்
by Bella Dalima 12-04-2018 | 4:55 PM
Colombo (News 1st)
ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று நண்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
வட மாகாண ஆளுநராக செயற்பட்ட ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநராக பி.பீ. திசாநாயக்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நிலூக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வட மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக எம்.பி. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக மார்ஷல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதுடன், வட மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.