அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனம்

அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனம்

by Staff Writer 12-04-2018 | 8:28 AM
COLOMBO (News 1st) அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனப்படுத்தபப்பட்டுள்ளது. அல்ஜீரியாவில் நேற்று இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். அல்ஜீரியாவின் பபாரிக் Boufarik பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த இராணுவ விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.