16பேரும் எதிர்க்கட்சியிலிருந்து ஆதரவு வழங்கத்தயார்

அரசாங்கத்திலிருந்து விலகிய16 பேரும் எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்கவுள்ளதாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவிப்பு

by Bella Dalima 12-04-2018 | 6:37 PM
Colombo (News 1st)  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்து, அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்கவுள்ளதாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியுடன் தொடர்ந்து இணைந்து செயற்படவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் முன்னோக்கி செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எஸ்.பி. திசாநாயக்க இதனைக் கூறினார். ஜனநாயகம், இறைமை, திருடர்களைக் கண்டுபிடித்தல் உள்ளிட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் தமது ஆதரவை வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகத்தை கட்டி எழுப்பவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இயலாது என எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார்.