சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 16 பேர் பதவி விலகல்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அரசாங்கத்திலிருந்து பதவி விலகுகின்றனர் 

by Bella Dalima 11-04-2018 | 9:45 PM
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அரசாங்கத்திலிருந்து பதவி விலகுகின்றனர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங்கத்தின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமது பதவிகளில் இருந்து விலகுவதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தமது சுயகௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.