ஐ.தே.க-வினர் சிலர் எம்முடன் இணையத் தயார்: தயாசிறி

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம்முடன் இணையத் தயாராகவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

by Bella Dalima 11-04-2018 | 5:38 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம்முடன் இணையத் தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தம்முடன் இணையத் தயாராகவிருந்தவர்கள் சற்று பின்வாங்கியுள்ளதாகத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, அவர்கள் மீண்டும் தம்முடன் இணைவார்கள் என நம்பிக்கை வௌியிட்டார்.