by Staff Writer 10-04-2018 | 12:31 PM
COLOMBO (News 1st) கொத்மலை - ரம்பொட பகுதியில் மின்னல் தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.