புத்தாண்டிற்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு

சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு - காமினி ஜயவிக்கிரம பெரேரா

by Staff Writer 10-04-2018 | 1:58 PM
COLOMBO (News 1st) அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், ஜனாதிபதி தலைமையில் இன்று சிநேகபூர்வமான முறையில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அனைத்து அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் மாத்திரம் தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஜனாதிபதியுடன் இருக்கும் குழுவினரை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தயார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்தக்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பு சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார். https://www.youtube.com/watch?v=NMGDgiHuiF4