கண்டி சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மேலும் இருவர் கைது

by Staff Writer 10-04-2018 | 8:21 AM
COLOMBO (News 1st) கண்டியில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது இராணுவ சிப்பாய்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று பூஜாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=6tzrPUqsZXo