மொழிகள் குறித்த பிரச்சினைக்கு அவசரஅழைப்பு பிரிவு

மொழிகள் தொடர்பிலான பிரச்சினைகளை அறிவிக்க அவசர அழைப்பு பிரிவு

by Staff Writer 09-04-2018 | 7:41 PM
COLOMBO (News 1st) மொழிகள் தொடர்பிலான பிரச்சினைகள் அறிவிப்பதற்கான அவசர அழைப்பு பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரச கரும மொழிகள் அமைச்சில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரச கரும மொழிகள் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன்
வட்ஸ் அப், வைபர், இமோ தொழில்நுட்ப முறைகளின் ஊடாக எங்கள் அமைச்சு 24 மணி ​நேரமும் புகார் பெற்றுக் கொள்ளும் வகையில் கோல் சென்டர் மத்திய நிலையம் ஒன்றை அமைச்சில் உருவாக்கியுள்ளோம்.அதனை தவிர 1956 என்ற ஒரு ஹொட்லைன் நேரடி அழைப்பு இலக்கம் தரப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=WtFL8WQN83w