மக்கள்சக்தி மூலம் மற்றுமொரு நீர் விநியோகத் திட்டம்

மக்கள் சக்தி மூலம் கம்புருப்பிட்டிய வைத்தியசாலைக்கு நீர் விநியோகத் திட்டம்

by Staff Writer 09-04-2018 | 4:35 PM
COLOMBO (News 1st) - மக்கள் சக்தி 1000 செயற்திட்டத்தின் கிழ் இன்று மாத்தறை கம்புருப்பிட்டிய வைத்தியசாலைக்கான நீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாத்தறை கம்புருப்பிட்டிய வைத்தியசாலையில் போதியளவு நீரை பெற்றுக்கொள்ள முடியாமையினால் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் மக்கள் சக்தி செயலகத்திற்கு அறியக்கிடைத்ததன் பின்னர் மக்கள் சக்தி குழுவினர் இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எஸ்லோன் நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த வேலைத்திட்டத்திற்காக 11 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இன்று காலை முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிரி தயானந்த மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் கெனெத் வீரகொடி மற்றும் எஸ்லோன் நிறுவனத்தின் முகாமையாளர் இசுரு ஜயவீர உள்ளிட்டவர்களினால் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=HQNYk5w0C9k