by Staff Writer 09-04-2018 | 4:17 PM
COLOMBO (News 1st) - நாட்டின் மின்சார தேவையை கருத்திற் கொண்டு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=rclp89DuTeE