சிரியாவில் ஏவுகணை தாக்குதல்: 14 பேர் பலி

சிரிய இராணுவ விமானத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்: 14 பேர் பலி

by Staff Writer 09-04-2018 | 5:07 PM
COLOMBO (News 1st)  சிரியாவிலுள்ள இராணுவ விமானத்தளத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹோம்ஸ் நகருக்கு அருகில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பொறுப்பு கூற வேண்டும் என முதலில் சிரிய அரசு குறிப்பிட்டிருந்தது. எனினும் இஸ்ரேலின் 2 போர் விமானங்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை எதுவித பதிலையும் வழங்கவில்லை.