எரிபொருளுக்கான புதிய விலை சூத்திரம் விரைவில்

எரிபொருளுக்கான புதிய விலை சூத்திரம் விரைவில்

by Staff Writer 08-04-2018 | 4:46 PM
COLOMBO (News 1st) - எரிபொருளுக்கான புதிய விலை சூத்திரம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பெற்றோலிய வளத்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சு மட்டத்திலான கலந்துரையாடலின் பின்னர் இணக்கப்பாடொன்று முன்னெடுக்கப்பட்டு விலை சூத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.