தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 24 வருட சிறை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை-க்கு 24 வருட சிறைத்தண்டனை

by Bella Dalima 06-04-2018 | 4:00 PM
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை-க்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. ஊழலில் ஈடுபட்டமைக்காக 17 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.