சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

by Bella Dalima 05-04-2018 | 4:06 PM
மான்கள் இரண்டை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் நீதிமன்றத்தால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சல்மான் கான் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது 2 மான்களை வேட்டையாடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.