பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நால்வர் அத்துருகிரிய,ஹோகந்தர பகுதிகளில் கைது

by Staff Writer 05-04-2018 | 12:28 PM
COLOMBO (News 1st) - கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் அத்துருகிரிய மற்றும் ஹோகந்தர பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 12 ரவைகளும், மகசின் ஒன்றும், ஆறு கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இரண்டு கிலோ கேரளா கஞ்சாவும், 79,800 ரூபா பணமும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துருகிரிய, தல்பே மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.